retired central government staff

Monday, 8 April 2019

Tamil is BEFORE CHRIST 905 YEARS ancient language result by AMERICAN FLORIDA STATE information in MADUARAI HIGH COURT ON 04-04-2019


வணக்கம்

                        உலக தமிழர்களுக்கு ஓர் இனிமையான மகிழ்ச்சித்  தகவல் .

நமது மதுரை உயர்நீதிமன்ற கிளையில் 04-04-2019 அன்று இந்திய அரசு சார்பில்

வழக்குரைஞர் திரு . கதிர்வேலு அவர்கள், நீதியரசர்கள் திரு.கிருபாகரன் ,

திரு.சுந்தர் - முன்னிலையில் தெரிவித்த தகவல்.

நமது திருநெல்வேலி அருகில் உள்ள ஆதிச்ச நல்லூர் (தற்போது தூத்துக்குடி

மாவட்டம்) அகழ்வாராய்ச்சி வல்லுநர்களால் கண்டெடுக்கப்பட்ட இரண்டு

பொருட்கள் அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாண ஆராய்ச்சி கூடத்திற்கு

கார்பன் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட முடிவுகள் வந்துவிட்டது என்றார்.

***அதில் ஒரு பொருள் கி.மு 905 ஆண்டு மற்றும் இன்னொன்று கி.மு.791 ம்

ஆண்டு தமிழர்கள் பயன்படுத்தியது  என தெரிவித்துள்ளார்கள் .***

நமது தமிழ் மொழி கலாச்சாரம்  3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதை

அமெரிக்க ஆராய்ச்சி கூடம் இந்த உலகத்திற்கு தெரிவித்துள்ளது.

*** அதே போல் தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் கிடைத்த  தமிழ் பிராமி

எழுத்துக்கள்  கி.மு.395 ம் ஆண்டு வழக்கத்தில் இருந்தது என்றும் இந்திய

அரசின் வழக்குரைஞர் உயர்நீதி மன்றத்தில் தெரிவித்தார்.***

மேற்கண்ட ஆராய்ச்சி முடிவுகள் நமது தமிழ் மொழி உலகத்தில் பழமையான

வளம் நிறைந்த சிறந்த மொழி என இந்த கணினி யுகத்தில் ஆதாரத்துடன்

நிரூபிக்கப்பட்டுள்ளது .***

மேற்கண்ட தகவல் உலகத்தமிழர்களுக்கு தெரிவிக்க பாடுபட்ட தூத்துக்குடி

மாவட்ட எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி திரு.காமராஜ் மற்றும்

அகழ்வாராய்ச்சி அதிகாரிகள் ,ஊழியர்கள்  ,ஆட்சியாளர்கள் ,தமிழ் அறிஞர்கள்

ஆகியோர்களுக்கு தமிழ் மக்கள் சார்பாக பாராட்டுகளும் வாழ்த்துக்களையும்

தெரிவித்து  மகிழ்வோம்.

*********************************************************************************

தகவல் -தினத்தந்தி -தமிழ் நாளிதழ் 05-04-2019 திருநெல்வேலி
 


 

Thursday, 4 April 2019

TIRUNELVELI CITY IN TAMILNADU STATE INDIA

Have a good day.

Welcome to all to visit the world ancient city TIRUNELVELI in India .

Tirunelveli is a historical town in India.

Around the city  hills, rivers,paddy fields,sea shores,palm trees,dry land (called as 

theri) and all natures around the city.

It was established before more than 5000 years.

Because Tamil poet Kambar note his KAMBARAMAYANA that the hero of RAMAYANAM 

GOD Raman says to his beloved captain Maruthy @ Anchaneyar to go south Inida side 

to find ( Rama,s wife) SEETHA DEVI .And order him not enter the POTHIKAI MALAI.

Because at pothikai malai one of the TAMIL MUNIVAR AGATHIYAR residing area. (He send by 

GOD SIVAN to teach TAMIL LANGUAGE and establish Tamil sangam (now a days called like 

Research university).

Because TAMIL IS an ancient sweet  language and if MARUTHI enter the pothikai malai he is 

forget himself,and he  change  as slave to TAMIL language and he join like  student to TAMIL 

MUNIVAR.AGATHIYAR, S Asranam.(Village).

In the above note at kambaramayana we know the pothikai malai near TIRUNELVELI city 

is near to  well established TAMIL research UNIVERSITY

See other important records in next posts

04/04/2019.
Tirunelveli 





Friday, 1 March 2019

                                             
                         வாழ்க தமிழ் ***சைவமும் தமிழும் தழைத்து இனிது ஓங்குக 
    வணக்கம் ,
                        வரும் 04-03-2019 திங்கள் கிழமை மாசி மாதம் 20 ம் நாள் 
மகாசிவராத்திரி விழா கொண்டாடப்பட இருக்கின்றது.
                         திருநெல்வேலி மாநகர் மையத்தில் மாபெரும் கோபுரங்களுடன் 
குடிகொண்டிருக்கும் அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் அன்னை காந்திமதி திருக்கோவிலில் ஆண்டுதோறும் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டுவருகிறது.
                            சிவராத்திரி மாலைமுதல் பக்தர்கள் வருகை அதிகரிக்கும்.
இரவு முழுவதும் அனைத்து  சிவன் சன்னதிகளிளும் திருவாசகம், திருமுறை பாராயணம், வேத மந்திரங்கள் முழங்கும்.பக்தர்கள் கூட்டம் ஆர்வமுடன் ஆண்டவன் புகழ் பாடி மலர்கள்,பன்னீர்,வில்வம் இலை கொண்டு சிவனுக்கு 
அர்ச்சனை அலங்காரங்கள் செய்து மகிழ்ந்து இறைவன் அருள் வேண்டி 
இரவு முழுவதும் கண் விழித்து திரு கோவிலை வலம் வருவார்கள் .
     
                           திருநாவுக்கரசர் திருமடம் சார்பில் திருவுருமாமலை பன்னிரு திருமுறை வழிபாட்டுக்குழு அன்பர்கள் இரவு முழுவதும் சுவாமி மற்றும் அம்மன் பிரகாரம் சுற்றிவந்து திருவாசகம் மற்றும் சிவன் துதி பாமாலை 
பாடியவண்ணம் வலம் வந்து விழாவினை சிறப்பித்துக்கொண்டிருப்பார்கள் .

                                நல்   மனம் கொண்ட அன்பர்கள் பக்தர்களுக்கு  பால் 
தேநீர் ,மற்றும் பிரசாதங்கள் வழங்கி இறைபணியிற் தங்களை   இணைத்து 
  தொண்டுசெய்வார்கள்.
                            
                               நெல்லையப்பர் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு  
ஏற்பாடுகள் செய்து விழா சிறப்புடன் நடைபெற இருக்கிறது.
                                
                                பக்தர்கள் அனைவரும் வருகை தந்து நெல்லையப்பர் மற்றும்  
அன்னை காந்திமதி அருள்பெறுவோம்.

                                             திருச்சிற்றம்பலம் 
02-03-2019
திருநெல்வேலி நகர் .
                         

Tuesday, 19 February 2019

nellaiappar kovil potraamarai theppam appar swamykal valam nikalchi(potramarai pond by appar swmykal function 19-2-2019

                                               வாழ்க தமிழ்
   
வணக்கம்.இன்று 19-02-2019 நமது திருநெல்வேலி மாநகரில் அருள் தரும் நெல்லையப்பர் அருள் மிகு காந்திமதி அம்மன் திருக்கோவில் வளாகத்திலுள்ள பொற்றாமரை குளத்தில் தெப்ப த்திருவிழா நடக்க இருக்கின்றது .

நமது சைவ அடியார் அப்பர் சுவாமிகளுக்கும் சமண மத மதம் சார்ந்த பண்டிதர்களுக்கும் நடந்த போட்டியில் அப்பர் பெருமானை கல்லில் கட்டி கடலில் இட்ட போது அந்த கல்லே படகு போல் மிதந்து அப்பர் பெருமான்
சிவபெருமான் துணையுடன் கரைசேர்ந்தார் .

அப்பர் பெருமான் சிவனை நினைந்து பாடி சிவனருள்  பெற்று கரை சேர்ந்த
நிகழ்வின்  அடையாளமாக இன்று  நெல்லையப்பர் கோவில் பொற்றாமரை
குளத்தில் சிறப்பாக அலங்கரிக்க பட்ட தெப்பத்தில் பதினோறு சுற்றுகள்  வலம்வரும் நிகழ்வும் அவருக்கு தெப்பத்தில் கரையில் அம்மையப்பர் இருவரும் காட்சி கொடுக்கும் வைபவம் கண்கொள்ளா நிகழ்ச்சியாகும் .

இந்த திருவிழாவிற்கு வருகை தரும் அன்பர்களும் ,இந்த பதிவினை வாசிக்கும் பேறுபெற்ற பக்தர்களும்  எல்லாம்  வல்ல சிவனருள் பெற்று வளமுடன் வாழ நெல்லையப்பரும் அன்னை காந்திமதியும் அருள்புரிவார்களாக.

                                                  திருச்சிற்றம்பலம்
19-02-2019
திருநெல்வேலி நகரம்

Saturday, 9 February 2019

nellaiappar koil history

                                                                       வாழ்க தமிழ்

                                          நெல்லையப்பர் திருக்கோவில் தோற்றம் .
நெல்லையப்பர் கோவில் தோன்றிய காலம் உறுதியாக ஆவனங்கள்   கிடைக்கவில்லை .ஆனாலும் சம்பந்தர்  பாடிய பதிகம்  ஒன்றினை  ஆதாரமாக கொண்டு இந்த திருத்தலம் 7 ஆம் நூற்றாண்டில் இருந்தது  என்று அறியலாம்.
நெல்லையப்பரை தரிசிக்க வந்த அப்பர் பெருமானே இத்த நெல்லை நகரின்  மாட மாளிகைகளை கண்டு வியந்து பாராட்டியுள்ளார்.
         கோவில் வளாகத்தில் கிடைத்த முதுமக்கள் தாழிகள் மூலம் நகரத்தின் பழமை அறியபடுகிறது.இடைப்பட்ட காலத்தில் சமணர்கள் இந்நகரத்தில் வாழ்ந்துள்ளார்கள் .
          தேவார மூவர் வருகைக்குப்பின் சமணம் மறைந்து சைவம் தழைத்தோங்கியது .அந்நாட்களில் நெல்லையப்பர் கோவிலில் ஆண்டின் 365 நாட்களும் திருவிழாதான் .அனைத்து  வகுப்பினருக்கும் நேர்த்தியான அகலமான தெருக்கள் அமைந்துள்ளது .
          நெல்லை சுற்றுப்புற மக்கள் வயல்களில் அறுவடை நடந்தவுடன் கோயிலில்\தான்யங்களை காணிக்கையாக செலுத்தி வந்துள்ளார்கள் .
365 நாள்களும் நெல்லைக்கு வரும் மக்களுக்கு தங்கிச்செல்ல 113 சாத்திரங்க்கள் இருந்துள்ளன .எந்த நேரமும் சத்திரங்களில் அன்னதானம் நடந்துள்ளது.அதற்காக சுற்றுப்புற மக்கள் கோவிலுக்கும் அன்னசத்திரங்களுக்கும் உணவு தானியங்கள் கொடுத்துள்ளார்கள் .
                                *****கட்டடக்கலை ******
அடுத்த தென்றலில் !
9-2-2019

Tuesday, 5 February 2019

kovil patti senpakavalli amman koil theppakuam siraplpu nikalvu

வணக்கம் 
          
                        கோவில்பட்டியில் ஒரு மகிழ்ச்சி யானா நிகழ்வு .

நமது திருநெல்வேலி தென்றல் முந்தய இடுகையில் வறட்சி மிகுந்த பங்குனி 
திருவிழாவின் போது அந்த ஊர் செண்பகவல்லி அம்மன் கோயில்  திருகுளத்தை, கோவில் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் சார்பாக ஒரு சமுதாய பக்தர்கள் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டுவந்து நிறைத்து தெப்ப குளத்தில் சுவாமி மற்றும் அருள்மிகு செண்பகவல்லி அம்மன் வலம்  வர சிறப்பாக 
வருடம் தோறும் பங்குனி பெருவிழா நடைபெறுவதாக குறிப்பிட்டுருந்தோம்.

       கோவிப்பட்டி  பக்தர்கள்  சென்பகவல்லி யம்மன் கோயில் தெப்பக்குளத்தை நீர் நிறைத்த  திருப்பணியை  ஆண்டவன் மனம் குளிர ஏற்றுக் கொண்டதன் 
விளைவாக சில நாட்கள் முன் தெப்பக்குளத்தில் ஆங்காங்கே திடீரென 
ஊற்றுகள் தோன்றி தண்ணீர் பெருகிவருகிறது  என்ற மகிழ்ச்சியான 
செய்தியை  தினகரன் தமிழ் நாளேடு 03-02-2019 ல் பக்கம் 2 ல் புகைப்படத்துடன் 
வெளியிட்டுள்ளது.
           முயற்சியுடையார் எனறும் மகிழ்ச்சி அடைவர்  என்பதற்கு இந்த
நிகழ்வு நல்ல முன்னுதாரணம்.

              நல்ல செயலுக்கு ஆண்டவனும் இயற்கையும் சேர்ந்து கருணை 
காட்டுவார்கள் என்பது உண்மையாகிவிட்டது.

நன்றி -தினகரன் தமிழ் நாளேடு -03-02-2019

              
                நாடார் உறவின்முறை சங்கம்    லாரிகள் மூலம் தண்ணீர் நிறைவு
                செய்தது வந்தது குறிப்பிடத்தக்கது.
                
                நல்ல செயல் யார் செய்தா தலும் போற்றுதலுக்குரியது .
04-02-2019
தென்றல் தொடரும் !

                

Friday, 25 January 2019

nellaiappar thirukovil theppa thiruvilzha

             அருள்மிகு  சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில் தெப்பத்திருவிழா 
                                                      நாள்  23-01-2019 புதன்கிழமை 


ஆண்டுதோறும் தை  மாதம் நடைபெறும் தைப்   பூச திருவிழா இந்த ஆண்டும் 
சிறப்பாக நடைபெற்றது. விழாவின் நிறைவு நிகழ்வாக வெளித்தெப்பம் 
வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டு வேத மந்திரங்கள் ஒலிக்க 
சிவாச்சாரியர்கள் சிவபெருமானை போற்றி அன்னை காந்திமதி புகழ் பாடி 
மேள தாளங்கள் முழங்க அருள்தரும் நெல்லையப்பர் மற்றும் அருள்மிகு அன்னை காந்திமதி, பஞ்ச மூர்த்திகளுடன் ஸ்வாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் உள்ள வெளித்தெப்பம் எழுந்தருளினார்கள் .
          அங்கு அம்மையப்பர் இருவருக்கும் சிறப்பு தீப ஆராதனை 
காட்டப்பட்டது .
           பக்தர்கள் கண்குளிர தெப்பத்திருவிழாவை கண்கொண்டு அம்மையப்பர் 
அருள் பெற்றுச்சென்றனர் .
            மழைக்கு அதிபதி வருண பகவான் கருணை குறைவால் , இந்த ஆண்டு 
தெப்பம் நீர்குறைந்து காணப்பட்டதால் தெப்பத்தில் உள்ள மண்டபத்தை 
சுற்றி வர இயலவில்லை.
            அடுத்த ஆண்டு வருணபகவான் போதிய மழை தந்தருள 
இப்போதே சுவாமி நெல்லையப்பர் மற்றும் அன்னை காந்திமதி பாதம் 
பணிந்து வேண்டுவோம்.
           சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால்  இந்த காலகட்டத்தில் 
சிவனருள் பெற்ற அம்மை ஒருத்தி தண்ணீர் நிறைந்த இந்த வெளி 
தெப்பத்தில் நீரில் மிதந்து தனது நெஞ்சில் ஒரு தீபத்தை ஏற்றி சுமார் 
பதினோரு சுற்றுகள் சுற்றி இறைவனை வழிபட்டு வந்தார்கள்.
          அந்நாட்களில் இறைவன் அருள் நிறைந்து நெல்லையை சுற்றி 
பசுமையான வயல் வெளிகளில் நெற்பயிர் மற்றும் சோலைகளாக 
இந்த நெல்லை மாநகர் திகழ்ந்தது .
          நெல்லையில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரமுள்ள வறட்சி 
அதிகமுள்ள கோவில் பட்டி நகரில் அருள் தரும் செண்பகவல்லி 
அம்மன் திருக்கோவிலில் கோடை காலதில் நடைபெறும் விழாவில் 
வறண்டு கிடைக்கும் தெப்பத்தை அவ்வூர் அன்பர்கள் மற்றும் கோவில் 
நிர்வாகிகள் இணைந்து எண்ணற்ற லாரிகள் துணையுடன் தெப்பத்தை 
நிறைத்து செண்பகவல்லி அம்மனை மனம் குளிர செய்து விழா நடத்தி வருகிறார்கள்.
         ஆனால்  நெல்லையப்பர் கோவிலை சுற்றி தூய நீர் தெப்பத்திற்கு வர 
வழி இருந்தும் நம்மால் தெப்பத்தை நிறைவிக்க  இயலாதது சிந்திக்க 
வேண்டிய ஒன்று.
       "  கோவில்  இல்லா வூரில் குடியிருக்க வேண்டாம்"என்று மூதுரை 
உண்டு .கோவில் அருகில் தெப்பக்குளம் இருந்து அதனை ஆண்டு முழுவதும் 
நீர் குறையாமல் பராமரிப்பது  பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகம் இணைந்து செயல்படவேண்டிய நல்லசெயல் .

          அவ்வாறு செய்தால்  வரும் கோடை மாதங்களில் வெப்பம் நெல்லை 
நகரை சுற்றி அதிகம் தாக்க இயலாது..நகரில் தண்ணீர் பஞ்சமும் இல்லாது 
போகும்.

     எல்லாம் சிவன் அருள்  அபேசிவம். சிவனருளால் சிவன் அடி பணிந்து
வரும்காலம் செழுமையடைய அருள்புரிய வேண்டுவோம்.

                                        திருச்சிற்றம்பலம் 
24-01-2019
திருநெல்வேலி